Bakery 1
இலங்கைசெய்திகள்

பேக்கரி பொருட்கள் விலைகளும் குறைப்பு!!

Share

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது முட்டைத் தொகுதி, பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன, வியாழக்கிழமை (30) தெரிவித்தார்.

தலா 35 ரூபாய் என்ற விலையில் 10 இலட்சம் முட்டைகளை அரச வர்த்தக கூட்டுத்தாபனம், பேக்கரி
உரிமையாளர்களுக்கு வழங்கியதாகவும் நாட்டின் அரச நிறுவனத்தின் அங்கிகாரத்துடன்
கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மார்ச் 18ஆம் திகதி உற்பத்தித் திகதி இடப்பட்டுள்ள முட்டைகளில் காலாவதித் திகதி 2023ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி நிறைவடைவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள பேக்கரிகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக தெரிவித்த ஜயவர்தன, எதிர்காலத்தில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் முட்டை உற்பத்தியாளர்களும் இப்போது போட்டி விலையில் முட்டைகளை விற்பனை செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், நுகர்வோருக்காகச் செயற்பட்ட வர்த்தக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 இலட்சம் முட்டைகளும் கடந்த  23 ஆம் திகதி
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில்,  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் புதன்கிழமை (29) அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...