amnesty
இலங்கைசெய்திகள்

போராட்ட உரிமையை நசுக்கிய நாடுகளில் இலங்கையும்!!

Share
மக்களின் போராட்ட உரிமையை சீர்குலைத்த பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் பிராந்திய மனித உரிமைகள் தாக்கத்துக்கான சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரொஸ் முச்செனா தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற சர்வதேச மன்னிப்புச் சபையில் வருடாந்த அறிக்கையின் பிராந்திய வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதம் உங்கள் அரசாங்கத்துக்கும் உங்களுக்கும் இடையில் விவாதிக்கப்படுவதை நாங்கள் அறிவோம் என்று தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோருகிறது என்றும் கலந்துரையாடப்படும் அனைத்தும் பொது வரம்புக்குள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

எந்தவோர் உதவிப் பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் மீது பேரழிவான தாக்கத்தை ஏற்படுத்தியதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கை கண்டறிந்துள்ளது என்றும் மனித உரிமைச் சட்டத்தை தெற்காசிய நாடுகள் கையாளும் விதமும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலவரத்தை கருத்தில் கொண்டு, நாட்டின் 22 மில்லியன் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான அவசரத் தேவை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் மோசமான பொருளாதார நிலைமைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அரசாங்கம் எதிர்ப்பின் மீதான ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தியதாக இலங்கை குறித்த பிரிவில் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகள் சட்ட அமலாக்க முகவர்களால் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டுத்தப்பட்டதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டு ஆயுத மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் கவனிக்கப்படாமல் இருந்ததாகவும் பலவந்தமாக காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உண்மையையும் நீதியையும் தேடுவதாகவும் சபை தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...