000 1NF1IR
இலங்கைசெய்திகள்

பெரும்பான்மை வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்!!

Share

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஒழுங்குபடுத்துவதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 31 ஆம் திகதி இரவோடு இரவாக குறித்த விடயம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து இன்று காலை 10 மணி முதல் சட்டவரைபு தொடர்பான விவாதம் சபையில் இடம்பெற்ற நிலையில், மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இவ் வாக்கெடுப்பின்போது அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக 132 வாக்குகளும்,எதிராக 51 வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டு 81 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டவரைபு நிறைவேற்றப்பட்டுள்ளது,

இதனைத் தொடர்ந்து நாட்டில் தற்போது அவசரகால சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....