image a37de7ddfe
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மாயமான நால்வரும் சடலங்களாக மீட்பு

Share

வெல்லவாய, எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றிருந்த நிலையில் காணாமல் போன இளைஞர்கள் நால்வரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய மூவரின் சடலங்களும் புதன்கிழமை (22) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி யூ.ஜி.சந்திரகுமார தெரிவித்தார்.

பொத்துவிலுக்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து 5 மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்ட 10 இளைஞர்கள் எல்லேவல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றுள்ளனர்.

எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த பகுதியில் நீராடிய  போதே 4 பேர் மூழ்கியதாகவும் அதில் ஒருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை (21) மீட்கப்பட்ட போதும் சீரற்ற வானிலையால் ஏனையோரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

புதன்கிழமை (22) காலை முதல் கடற்படையினரும் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து நடத்திய தேடுதலில் ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனைகளின் பின்னர் நால்வரின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை, சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 20 வயதான அபூபக்கர் ஹனாஃப்,  முஹம்மது நஹ்பீஷ், மொஹமட் லபீர் மொஹமட் சுஹூரி,  முகமது அப்சல் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 17
செய்திகள்இலங்கை

உஸ்வெட்டகெய்யாவவில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் 24 வயது இளைஞன் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவரை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக...

1735875275 matara prison 6
செய்திகள்இலங்கை

விடுதலையாக இன்னும் 5 நாட்களே இருந்த நிலையில் விபரீதம்: மாத்தறையில் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து கைதி தப்பியோட்டம்!

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தென் மாகாணத்திற்குப்...

1769831545 dead 6
செய்திகள்அரசியல்இலங்கை

கையடக்கத் தொலைபேசி தகராறு: 14 வயது மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை!

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தில்...

4680497 2145223106
செய்திகள்உலகம்

கொங்கோவில் பயங்கரம்: சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – உலகளாவிய கோல்டன் உற்பத்தியில் பாதிப்பு!

கிழக்கு கொங்கோவில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற ருபாயா (Rubaya) சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200-க்கும் மேற்பட்ட...