depositphotos 47582093 stock illustration warning stamp
இலங்கைசெய்திகள்

வாகன உரிமையாளர்களுக்கு 15 நாட்கள் அவகாசம்!!

Share

மேல்மாகாணத்தில் இயங்கும் 50 வீதமான பயணிகள் போக்குவரத்து பஸ்களால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்செயலாக தெரிவு செய்யப்பட்ட கொழும்பு பஸ்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இவ்வாறான பேருந்துகளையும் வாகனங்களையும் தனித்தனியாக அடையாளம் காணும் வேலைத்திட்டம் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அடையாளம் காணப்பட்ட வாகனங்களின் வருவாய் உரிமம் கையகப்படுத்தப்பட்டு, குறைகளை நிவர்த்தி செய்ய 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் என்றும், ஒரு மாதத்திற்கு மேலாக குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச் சூழல் மாசடைவதோடு, பொதுமக்களும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாகவும், கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...