Eran Wickramaratne
இலங்கைசெய்திகள்

வரி விதிப்பை இரட்டிப்பாக்குங்கள்!

Share

அரசாங்கம் தற்போதுள்ள 1 இலட்சம் ரூபா வரி வரம்பை உடனடியாக குறைந்தது 2 இலட்சமாக அதிகரிப்பதன் மூலம் நடுத்தர வர்க்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

அதிக வருமானம் ஈட்டுபவர்களின் வரி சதவீதத்தை அதிகரிப்பதன் மூலம்  முன்மொழியப்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்று அவர் பரிந்துரைத்தார்.

எனவே, 1 இலட்சம் ரூபாய் வரி வரம்பை உடனடியாக குறைந்தது 2 இலட்சமாக உயர்த்தி நடுத்தர வர்க்க ஊழியர்களைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

உழைக்கும் மக்கள் வருமானத்தை இழந்து பெரும் வரிச்சுமையால் மக்கள் வீதிக்கு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இதனால் உணவுப் பாதுகாப்பின்மை, அதிகரித்த போஷாக்குக் குறைபாடு, நோய்களைத் தடுப்பது என்பன மக்களுக்குப் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...