korea
இலங்கைசெய்திகள்

கொரியாவில் வேலைவாய்ப்பு – 85 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Share

தென் கொரியாவில் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் காணப்படும் வேலை வாய்ப்பிற்காக, இலங்கை இளைஞர் யுவதிகளை தெரிவு செய்வதற்காக, 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள 7 ஆவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்காக 85,072 இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கு 31,378 பேர் விண்ணப்பித்தனர். இம்முறை அதற்கும் மேலதிகமாக அதிக எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான பதிவுகள் கடந்த 2023.02.13 முதல் 2023.02.23 ஆம் திகதி வரை ஒன்லைன் ஊடாக இடம்பெற்றன என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் தற்போது பணியகத்தினால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய வேலை வாய்ப்புக்களுக்கான கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சை எதிர்வரும் 2023 மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், மீன்பிடித் துறை வேலை வாய்ப்புக்களுக்கான பரீட்சை, எதிர்வரும் 2023 செப்படம்பர் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பரீட்சைகள் பன்னிப்பிட்டி கொரிய பரீட்சை நிலையத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...