vote
இலங்கைசெய்திகள்

“தேசத்தின் மனநிலை” – முடிவுகள் வெளியாகின

Share
“தேசத்தின் மனநிலை” எனும் Gallup பாணியிலான வாக்கெடுப்பு  பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் வெரிட்டே ரிசர்ச்சினால் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கம், நாடு, பொருளாதாரம் ஆகியவை குறித்த அங்கீகாரம், திருப்தி மற்றும் நம்பிக்கை குறித்து இது மதிப்பிட்டது.

வெரிட்டே ரிசர்ச் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்பு கருவியின் ஒரு பகுதியாக இந்த வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது. இது பிற நிறுவனங்களுக்கும் இலங்கையின் மனநிலையை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

  1. அரசாங்கத்தை அங்கீகரிக்கும் வீதம் | 10% | “தற்போதைய அரசாங்கம் செயல்படும் விதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா?” என்ற கேள்விக்கு 10 சதவீதமானவர்கள் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்கள் (பிழைக்கான வரம்பு ± 2.04% உள்ளடங்கலாக). ஒக்டோபர் 2022 இல் இருந்த அதே மிகக் குறைந்த அளவுக்கு இது சமமானதாகும்.   ஜூன் 2022 இல் அங்கீகரிக்கும் அளவீடு மாற்றமடையாது 3% ஆக இருந்தது.
  2. இலங்கை தொடர்பில் திருப்தி | 4% | “பொதுவாக இலங்கையில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா இல்லையா? என்ற கேள்விக்கு 4 சதவீதமானவர்கள் மட்டுமே திருப்தியடைவதாகத் தெரிவித்துள்ளனர் ((பிழைக்கான வரம்பு ± 1.50% உள்ளடங்கலாக). அக்டோபர் 2022 இல் இது 7 சதவீதமாகவும்  மற்றும் ஜூன் 2022 இல் 2 சதவீதமாகவும்  காணப்பட்டது.
  3. பொருளாதாரம் குறித்த நம்பிக்கை எதிர்மறை (-) 78.4 | பொருளாதாரத்தின் நம்பிக்கை தொடர்பில் மதிப்பெண்களை வழங்குவதற்கு பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால நிலைமை குறித்த பல்தேர்வு கேள்விகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கான மதிப்பெண்கள் எதிர்மறை (-) 100 இலிருந்து நேர்மறை (+) 100 வரை இருக்கலாம். பூச்சியத்திற்கு மேற்பட்ட மதிப்பெண், மக்களில் பலர் பொருளாதார நிலைமைகளை எதிர்மறையாக அன்றி சாதகமாகப் பார்ப்பதாக அர்த்தப்படும். அனைவரும் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதாகவும் (நன்றாக அல்லது மிக சிறப்பாக உள்ளதிற்கு பதிலாக) தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் (மேம்படுவதற்கு பதிலாக)  கருதினால் மதிப்பெண் (-) 100 ஆக இருக்கும். பெப்ரவரி 2023 இல், 0.3% பேர் பொருளாதார நிலை சிறப்பானது என மதிப்பிட்டுள்ளனர், 6% பேர் இது நல்லது என மதிப்பிடுகின்றனர்; மேலும் 6.3% பேர் இது சிறப்பாகி வருவதாக மதிப்பிட்டுள்ளனர். எனவே இதன் விளைவுப் பெறுபேறு (-) 78.4 (அண்ணளவாக (-) 78) ஆகும். இம் மதிப்பீடு 2022 அக்டோபர் மாதத்தில்  (-) 78 ஆகவும் 2022 ஜூன் மாதத்தில் (-) 96 ஆகவும் காணப்பட்டது.

தேசத்தின் மனநிலையை” நடைமுறைப்படுத்துதல்

நாடு தழுவிய தேசிய ரீதியிலான பிரதிநிதித்துவத்தைக் கொண்ட மாதிரி பதில்களை இந்த வாக்கெடுப்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதற்காக பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் இலங்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளையோரிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாதிரி மற்றும் வழிமுறையில் அதிகபட்ச பிழைக்கான வரம்பு 3 சதவீதத்தை விடக் குறைவாகவும், நம்பக இடைவெளி 95 சதவீதமாக இருப்பதையும் உறுதிசெய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்புக்கான பங்காளர் வான்கார்ட் சர்வே (பிரைவட்) லிமிடெட் (Vanguard Survey (Pvt) Ltd) ஆகும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Cabinet Decisions Driving License Renewel
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர கால நீடிப்பு: வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க...

c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அதிரடி முடிவு!

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களின் உரிமைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும்...

chinas xi says india china are friends partners
செய்திகள்இந்தியா

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்கள், பங்காளர்கள்: குடியரசு தின வாழ்த்தில் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

US Embassy relief
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா சூறாவளி நிவாரணம்: சிறு மற்றும் நுண் வர்த்தகர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நேரடி நிதியுதவி – அரசாங்கம் அதிரடி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு...