ரணில் அரசியல் ஏமாற்று வித்தை காட்டினால் பேச்சு மேசையை விட்டு உடன் வெளியேறுவோம்! எதிர்க்கட்சி சாடல்
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்!!!

Share

நாட்டை அழித்து நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களைப் பாதுகாக்கும் யானை – மொட்டு கூட்டணியை கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டும் எனவும், அதுமட்டுமல்லாமல், இந்நாட்களில் பணம் செலவிட்டு சமூக ஊடகங்களில் போலியான அலைகளை உருவாக்கி மக்களை ஏமாற்ற மற்றுமொரு குழு செயற்பட்டுவருவதாகவும், அவர்கள் குறித்தும் மக்கள் கவனம் செலுத்தி குறித்த அலைகளுக்கு மக்கள் ஏமாறாமல் இருக்குமாறும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மக்கள் மீதான தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு எதிராகவே பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரையை தாம் புறக்கணித்ததாக தெரிவித்த அவர், மக்கள் வாழ்வை அழிக்கும் அக்கிராசன உரைகளுக்கு ஏமாறாமல் மக்களின் வாழ்வை அழிக்கும் இந்த ஆட்சிக்கு எதிராக விரைவில் மக்கள் அலையுடன் கொழும்பு வரவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும், வரிக்கு மேல் வரி விதிக்க வேண்டாம் எனவும், மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டாமெனவுமே யானை மொட்டு அரசாங்கத்திடம் கூறிக்கொள்வதாகவும், இந்த யானை மொட்டு அரசாங்கத்தை விரட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும் ராஜபக்சவின் அடிமைகளாக மாறிய 220 இலட்சம் மக்களும் நிர்க்கதியாகியுள்ளனர் எனவும், இதுபோன்ற தருணத்தில், மக்கள் மீண்டும் 2019 ஆம் ஆண்டைப் போல போலிகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும், சமூக ஊடகங்கள் மூலம் செயற்கையாக உருவாக்கப்படும் சமூக ஊடக அலைகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் வாழவைக்கும் பொது யுகத்துக்கான ஆணையை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் அவதானத்தைத் திசை திருப்பி மார்ச் 9 தேர்தலை நடத்தாதிருக்க முயற்சிக்கின்றனர் என்பதனால், அக்கிராசன உரையையோ, நாடாளுமன்ற விவாதங்களையோ பற்றி சிந்திக்காமல் ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் வாக்குரிமைக்காக முன்நின்று மார்ச் 9 ஆம் திகதிக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...