ezgif 5 97b076fc46
இலங்கைஉலகம்செய்திகள்

உதவிகள் வழங்க தயார்! – ஜனாதிபதி உறுதி

Share

துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனுடன் உரையாடிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துருக்கி மக்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் அந்நாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து அங்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ 300 இராணுவ வீரர்கள் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளதாகவும் அழைப்பு கிடைத்ததும் அவர்களை அனுப்பவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் துருக்கியின் வெளிவிவகார அமைச்சரை தொடர்பு கொண்டு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்ததின் போது, துருக்கி உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்கியதாகவும் வீடுகளை இழந்தவர்களுக்கு வீட்டுத் தொகுதிகளை அமைத்துக் கொடுத்ததாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

#world #SriLanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...