police edited
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் பாவனை! – 47 பொலிஸ் குழுக்கள் கடமையில்

Share

மத்திய மாகாணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த, 47 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மஹிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (22) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில், மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தலைமையில், இந்த விசேட குழுக்கள் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்தில் 129 ஹெரோயின் வழக்குகள், 31 ஐஸ் தொடர்பான வழக்குகள், 199 கஞ்சா வழக்குகள் மற்றும் 234 வெவ்வேறு போதைப்பொருள் வழக்குகள் குறித்த பிரிவுகளுக்குள் நடத்தப்பட்டுள்ளதாகவும்இந்த நடவடிக்கைகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடரும் என்றும் அவர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...