ezgif 4 01270a76a1
இந்தியாசெய்திகள்

ஆற்றில் மூழ்கிய சிவன் கோவில் – பூஜை செய்யும் நேரம் மட்டும் வரும் வெள்ளம்

Share

ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், கொத்தப்பள்ளி அருகே கிருஷ்ணா ஆற்றின் நடுவில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளது.

கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஜூலை மாதம் சிவன் கோவில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. சிவன் கோயில் தண்ணீரில் மூழ்கியதால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சிவன் கோவில் மெல்ல மெல்ல வெளியே தெரிகிறது. இதையடுத்து கோவில் பூசாரி ராகவா சர்மா படகில் சென்று சாமிக்கு பூஜைகள் செய்கிறார்.

சாமிக்கு பூஜை செய்ய செல்லும்போது மட்டும் மூலவர் தெரியும் அளவு தண்ணீர் வற்றி விடுவதாகவும் பூஜைகள் செய்து முடித்து வெளியே வந்த பிறகு கருவறையை தண்ணீர் சூழ்ந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. மகா சிவராத்திரிக்குள் கோவிலை சுற்றி தண்ணீர் வற்றிவிடும் என நம்பப்படுகிறது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...