ezgif 4 01270a76a1
இந்தியாசெய்திகள்

ஆற்றில் மூழ்கிய சிவன் கோவில் – பூஜை செய்யும் நேரம் மட்டும் வரும் வெள்ளம்

Share

ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், கொத்தப்பள்ளி அருகே கிருஷ்ணா ஆற்றின் நடுவில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளது.

கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஜூலை மாதம் சிவன் கோவில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. சிவன் கோயில் தண்ணீரில் மூழ்கியதால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சிவன் கோவில் மெல்ல மெல்ல வெளியே தெரிகிறது. இதையடுத்து கோவில் பூசாரி ராகவா சர்மா படகில் சென்று சாமிக்கு பூஜைகள் செய்கிறார்.

சாமிக்கு பூஜை செய்ய செல்லும்போது மட்டும் மூலவர் தெரியும் அளவு தண்ணீர் வற்றி விடுவதாகவும் பூஜைகள் செய்து முடித்து வெளியே வந்த பிறகு கருவறையை தண்ணீர் சூழ்ந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. மகா சிவராத்திரிக்குள் கோவிலை சுற்றி தண்ணீர் வற்றிவிடும் என நம்பப்படுகிறது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...