KIM JONG
உலகம்செய்திகள்

நாடகங்கள் பார்த்த சிறுவர்களுக்கு மரண தண்டனை! – வடகொரியாவில் பயங்கரம்

Share

வடகொரியா அதிபர் கிம்ஜங் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி தென்கொரியா சினிமாக்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இணைய தளத்தை பார்க்க கூட கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. அரசு அனுமதித்த இணைய தளங்களை மட்டுமே பார்க்க முடியும். அரசின் விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டன. இதனால் வெளி உலக தொடர்பு இல்லாமல் அந்நாட்டு மக்கள் இருந்து வருகின்றனர்.

ஆனாலும் அதையும் மீறி தென் கொரியா நாட்டில் இருந்து பிளாஸ்டிரைவ் போன்ற கருவிகள் வடகொரியாவுக்கு கடத்தி வரப்படுகின்றன. தென்கொரியா நாடகங்களுக்கு வடகொரியாவில் நல்ல மவுசு உள்ளது. இதனால் ரகசியமாக விற்பனை செய்யப்படும் சி.டி.க்களை வாங்கி பொதுமக்கள் பூட்டிய வீட்டுக்குள் அமர்ந்து அந்த நாடகங்களை பார்ப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ரியாய்சங் என்ற மாகாணத்தில் 16 மற்றும்,17 வயது பள்ளி சிறுவர்கள் 2 பேர் சட்ட விரோதமாக தென்கொரியா நாடகங்களை பார்த்ததாக கிடைத்த தகவலின் பேரில் வடகொரியா ராணுவத்தினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் தென்கொரியா நாடகங்களை பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி சம்பவத்தன்று 2 சிறுவர்களும் பொது மக்கள் முன்னிலையில் ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா சமீபகாலமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது ஏதும் அறியாத 2 பள்ளி சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...