santhiya
இலங்கைசெய்திகள்

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண் – சந்தியா தெரிவு

Share

2022 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னலிகொட பிபிசியால் பெயரிடப்பட்டுள்ளார்.

அரசியல், அறிவியல், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் இலக்கியம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த பெண்களை உள்ளடக்கி, உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் காணாமல் ஆக்கப்பட்ட புலனாய்வு ஊடகவியலாளரும் மற்றும் கேலிச்சித்திர கலைஞருமான பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர்.

இலங்கையில் காணாமல் போனவர்களின் தாய்மார்கள் மற்றும் மனைவிகளுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட பணிகளுக்காக அவர் பல பாராட்டுக்களைப் பெற்றதுடன், மனித உரிமைகளுக்காகஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் பல அறிக்கைகளை சந்தியா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...