image 24f9a76b27
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊசி மூலம் போதைப்பொருள் – யாழில் சிறுவன் உயிரிழப்பு

Share

ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுவனே அவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் என யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , வைத்திய பரிசோதனையில் சிறுவனுக்கு கிருமி தொற்று ஏற்பட்டு இருந்தமை கண்டறியப்பட்டது.

அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுவன் ஊசி மூலம் போதைப்பொருட்களை நுகர்வதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய போதே கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை ஊசி மூலம் நுகர்ந்ததால் , கிருமி தொற்று ஏற்பட்டு , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...