image c222688151
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பண மோசடி! – பெண்ணுக்கு எதிராக இளைஞர்கள் முறைப்பாடு

Share

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தம்மை கனடாவிற்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணத்தினை கடந்த ஏப்ரல் மாதம் பெற்றுக்கொண்டதாகவும் , 7 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரையில் தம்மைவெளிநாடு அனுப்புவதற்கான எந்த ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை,

அந்நிலையில் அவரிடம் நாம் பணத்தினை மீள கேட்ட போது , கொழும்பில் உள்ள முகவர் ஒருவருக்கு தான் பணத்தினை செலுத்தி விட்டதாகவும் , தற்போது அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

தாம் கொடுத்த பணத்தினை அவரிடமிருந்து மீள பெற்று தர வேண்டும் என கோரியே பொலிஸ் நிலையத்தில் இளைஞர்கள் முறைப்படு செய்துள்ளனர்.

சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களில் ஒருவர் 55 இலட்ச ரூபாயும் , மற்றையவர் 44 இலட்சத்து 35ஆயிரம் ரூபாயும் குறித்த பெண்ணிடம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகன தரிப்பிடக் கட்டணங்கள் அறவிடுவது இடைநிறுத்தம்!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைப்பதற்காக அறவிடப்பட்டு வந்த கட்டணங்களை, மறு...

12 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள்: நாளை முதல் புதிய நடைமுறை அமல்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்...

10 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரிய அனுமதியின்றி ட்ரோன்களை இயக்கத் தடை: இலங்கை விமானப்படை விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கைக்குள் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இயக்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை...

09 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த புதிய எரிபொருள் திட்டம்: ஜனாதிபதி தலைமையில் விசேட தீர்மானம்

இலங்கையில் நிலவும் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் மீன்பிடித் தொழிலைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதை...