mahinda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வதேசத்தின் பிடியில் இலங்கை! – கூறுகிறார் மஹிந்த

Share

இலங்கையின் பொருளாதாரத்தின் பின்னணியில் சர்வதேச சக்தியொன்று செயற்படுவதாகவும், இந்த சக்தி இன்னும் செயற்படுவதாகவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதத்தின் போதே முன்னாள் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

இந்த சக்திகளின் உள்ளூர் முகவர்கள் இன்னும் செயலில் உள்ளனர்.தேசத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு நிதியுதவி செய்தவர்கள் அவர்கள்தான். அவர்களின் நடவடிக்கை சுற்றுலாத் துறையை பாதிக்கிறது, இது இப்போது மீண்டு வரத் தொடங்கியுள்ளது.

பாதுகாப்பு ஒதுக்கீடு தொடர்பில் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு நாட்டின் பாதுகாப்பு எல்லாவற்றையும் விட முக்கியமானது என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். தேசத்தின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

வரவு -செலவுத் திட்டம் 2023 சில துறைகளின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை என்றாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான மாபெரும் பாய்ச்சலாகும். வரவு -செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. நஷ்டத்தில் உள்ள அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

இருப்பினும் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தேசிய சொத்துக்களை வெளிநாட்டு சக்திகளுக்கு விற்பதற்கு நாங்கள் எதிரானவர்கள்” என்றும் கூறினார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...