istockphoto 546761524 612x612 1
இலங்கைசெய்திகள்

எகிறியது பாடசாலை உபகரணங்கள் விலை!!

Share

பாடசாலை மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், காலணிகள் மற்றும் சீருடைகளின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக, அந்த பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் புறக்கோட்டை பிரதேசத்தில் “அருண” நாளிதழ் நடத்திய ஆய்வின் போது இது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு பாடசாலை புதிய தவணைக்கு தேவையான உபகரணங்களை 5,000 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள கூடியதாக இருந்த போதும், இந்த வருடம் குறித்த தொகை 15,000 ரூபாவை தாண்டுவதாக தெரியவந்துள்ளது.

80 பக்கங்கள் கொண்ட அப்பியாசப் புத்தகம் ஒன்றின் விலை முன்பு 55 ரூபாவாக காணப்பட்ட நிலையில் தற்போது 145 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 180க்கு விற்பனை செய்யப்பட்ட சித்திரப் புத்தகத்தின் விலை 270 ரூபாயாக அதிகரித்துள்ளது. 80 பக்க சிஆர் புத்தகத்தின் விலை 160 ரூபாவில் இருந்து 320 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

10 ரூபாய் விலையில் இருந்த அழிப்பான் 40 ரூபாயாகவும், வரைவதற்கு பயன்படுத்தப்படும் பேஸ்டல் பெட்டியின் விலை 70 ரூபாவில் இருந்து 195 ரூபாவாக அதிகரித்துள்ளது.

10 ரூபாவாக இருந்த பேனாவின் விலை 30 ரூபாவாகவும், ஏ4 கடதாசி 10 ரூபாவில் இருந்து 10 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

அதன்படி, புத்தகங்களின் விலை, பக்க எண்ணிக்கையை பொறுத்து, 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

இவ்வாறாக ஒவ்வொரு பாடசாலை உபகரணங்களின் விலையும் உயர்ந்துள்ளதுடன், 1500 ரூபாவாக இருந்த ஒரு ஜோடி காலணி தற்போது 3000 ரூபாவை தாண்டியுள்ளது.

இதேவேளை, பாடசாலை பை ஒன்றின் விலையும் 1,000 ரூபாவில் இருந்து 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...