1790933 ukraine1
உலகம்செய்திகள்

மீண்டும் கெர்சன் நகருக்குள் உக்ரைன்

Share

உக்ரைன் மீது ரஸ்ய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதில் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. கெர்சன் நகரை மீட்டு உக்ரைன் படை கடுமையாக சண்டையிட்டு வந்தது.

இந்தநிலையில் கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக ரஸ்யா அறிவித்தது. இதையடுத்து அங்கிருந்து ரஸ்ய படைகள் வெளியேறின.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “ரஸ்ய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டுள்ளோம். அந்நகர் உக்ரைன் படை வசம் வந்துள்ளது” என்றார்.

ரஸ்ய படைகள் வெளியேறியதையடுத்து கெர்சன் நகருக்குள் உக்ரைன் ராணுவம் நுழைந்தது. மேலும் கெர்சனில் வசித்த மக்களும் அந்நகருக்குள் மீண்டும் வந்தனர்.

சாலைகளில் குவிந்த மக்கள் உக்ரைனுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். முக்கிய இடங்களில் பறந்த ரஸ்ய கொடிகளை கீழே இறக்கிவிட்டு உக்ரைன் தேசிய கொடியை ஏற்றினார்கள். இது தொடர்பாக வீடியோக்களை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதற்கிடயே கெர்சன் நகரில் ரஸ்யப் படையினர் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். இதனால் தேடுதல் நடவடிக்கை முடியும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் ராணுவத்தினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். உக்ரைன் விவகாரத்தில் ரஸ்யா- அமெரிக்கா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடனின் 2 சகோதரர்கள், ஒரு சகோதரி உள்பட 200 பேர் ரஸ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 8
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவில் படகு மூழ்கியதில் 38 பேர் மாயம்

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற பயணிகள் படகு மூழ்கியதில் 38 பேர்...

Murder Recovered Recovered Recovered 7
இலங்கைசெய்திகள்

டொலர் ஒன்றின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி(CBSL) வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (03) ​​அமெரிக்க...

Murder Recovered Recovered Recovered 6
இலங்கைசெய்திகள்

மேர்வின் சில்வாவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேலும் இரண்டு பேருக்கு, கம்பஹா உயர் நீதிமன்ற நீதிபதி...

Murder Recovered Recovered Recovered 4
உலகம்செய்திகள்

இந்தியா -அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்

இந்தியாவும் அமெரிக்காவும் 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம், 2025...