1668153819 nalini 2
இந்தியாஇலங்கைசெய்திகள்

நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை!

Share

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் ஆகியோா் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்த நிலையில் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆறு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த போதிலும், இந்த வழக்கில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று கூறி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

#SriLankaNews #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1 6
செய்திகள்அரசியல்இலங்கை

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும்; நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படும் – பிரதமர் ஹரினி அமரசூரிய!

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு...

1693715245 THONDAMAN 2
செய்திகள்அரசியல்இலங்கை

இ.தொ.கா பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை – ஜீவன் தொண்டமான் அதிகாரப்பூர்வ விளக்கம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாம் விலகப்போவதாக சமூக ஊடகங்களில்...

Karu Flood News Pix 03
செய்திகள்இலங்கை

சோமாவதி – சுங்காவில வீதி 3 அடி நீரில் மூழ்கியது: போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், சோமாவதி புனித பூமிக்குச் செல்லும் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது....

inject 251215
செய்திகள்இலங்கை

‘ஒன்டன்செட்ரோன்’ தடுப்பூசியால் நோயாளிகளுக்குப் பாதிப்பு: சுகாதார அமைச்சுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம்!

சர்ச்சைக்குரிய ‘ஒன்டன்செட்ரோன்’ (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் உடல்நலச் சிக்கல்கள்...