download 5 2
இலங்கைசெய்திகள்

கந்தகாடு மோதல்! – 13 பேர் மாயம்

Share

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் அண்மையில் இடம்பெற்ற மோதலின் போது தப்பிச் சென்ற 13 கைதிகள் இதுவரை சரணடையவில்லை என பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த 6ஆம் திகதி இரவு ஏற்பட்ட மோதலின் போது 50 தொடக்கம் 100 வரையான கைதிகள் முகாமிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மோதலின் பின்னர் இதுவரை 301 கைதிகள் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

மோதலில் ஈடுபட்ட 215 கைதிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மோதலின் போது தப்பியோடிய 14 கைதிகள் புலதிசிபுர மற்றும் சேருநுவர பொலிஸ் நிலையங்களில் இருப்பதாகவும், காயமடைந்த 04 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பிரிகேடியர் ரவி ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

எனினும், தப்பியோடிய 13 கைதிகள் இன்னும் சரணடையவில்லை.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...