IMG 20221022 153900
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறுமியின் சங்கிலியை அறுத்த இராணுவச் சிப்பாய்மடக்கிப் பிடிப்பு!

Share

வலி.வடக்கு பலாலி வள்ளுவர் புரத்தில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று வந்த சிறுமியின் சைங்கிலியை அபகரித்த இராணுவச் சிப்பாய் ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (22) மதியம் இடம்பெற்றது. வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவச் சிப்பாய் சங்கிலியை அபகரித்து விட்டு மாணவியையும் கீழே தள்ளி விட்டுச் சென்றுள்ளார்.

காயமடைந்த சிறுமி தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் சங்கிலியை அபகரித்த இராணுவச்சிப்பாய் ஊர் மக்களினால் பிடிக்கப்பட்டு பலாலி பொலிஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில், பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....