இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் நடந்த பேருந்து விபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்குச் சென்றபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரேவா மாவட்ட சுஹாங்கி பஹாரி பகுதியில் பேருந்து சென்றபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் மீது மோதியது. இதில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சுஹாங்கி மாவட்ட மருத்துவமனையிலும் படுகாயமடைந்தவர்கள் ரேவா சஞ்சய் காந்தி மெம்மோரியல் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#Indianews
Leave a comment