IMF Jpeg
இந்தியாஉலகம்செய்திகள்

உலக பொருளாதார வளர்ச்சி சரிவை நோக்கி! – IMF அறிக்கை

Share

உலக பொருளாதார கணிப்பு அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

அதில், 2021-ல் 6 சதவீதமாக இருந்த உலக பொருளாதார வளர்ச்சி 2022-ல் 3.2 சதவீதமாகக் குறையும் என்றும், 2023-ல் இது 2.7 சதவீதமாக மேலும் குறையும் என்றும் கணித்துள்ளது.

வளர்ந்த நாடுகளின் பொருளாதாரமும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பெரும்பாலும் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் கடந்த 2021-ல் 5.2 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 2022-ல் 2.4 சதவீதமாகவும், 2023-ல் 1.1 சதவீதமாகவும் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2021-ல் 5.7 சதவீதமாக இருந்த அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, 2022-ல் 1.6 சதவீதமாகவும், 2023-ல் ஒரு சதவீதமாகவும் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

இதேபோல், கடந்த 2021-ல் 8.1 சதவீதமாக இருந்த சீன பொருளாதார வளர்ச்சி, 2022-ல் 3.2 சதவீதமாகவும், 2023-ல் 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதார நாடாகத் திகழும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி கடந்த 2021-ல் 8.7 சதவீதமாக இருந்த நிலையில், அது சற்று குறைந்து 2022-ல் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும், 2023-ல் அது 6.1 சதவீதமாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....