image cc4b02ff58
செய்திகள்விளையாட்டு

33 ரன்களால் வென்றது இலங்கை

Share

T – 20 உலகக்கிண்ண தொடரின் எட்டாவது சீசன் அக்டோபர் 16ஆம் திகதி முதல் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இன்று இடம்பெற்ற உலகக்கிண்ண T – 20 பயிற்சிப்போட்டியில் இலங்கை அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிம்பாப்வே அணியை வெற்றி கொண்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதனையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக குசல் மென்டிஸ் 54 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர், 189 என்ற வெற்றியிலக்கை நோக்கி விளையாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் மஹீஷ் தீக்ஷன மற்றும் சமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

#sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...