202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மணக்கோலத்தில் இளம் ஜோடி கைது!

Share

மணக்கோலத்தில் இருந்த இளம் ஜோடி, இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அங்குலான பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, இந்த இளம் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளது.

மொரட்டுவ, சௌருபுர பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபத்தில் வைத்து, 15 வயதான மணப்பெண்ணும் 19 வயதான மணமகனும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் காதலுக்கு சிறுமியின் பாட்டனார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, காதலனுடன் தப்பிச் சென்ற சிறுமி, மக்கொன பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, உறவினர்கள் ஒன்று கூடி திருமண வரவேற்பு மற்றும் திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த நிலையில், பொலிஸாரால் சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இளைஞனை மொரட்டுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...