Joseph Stalin
அரசியல்இலங்கைசெய்திகள்

ஊடகங்களை நசுக்கத் திட்டம்!

Share

தற்போதைய அரசாங்கம் புதிய சட்டங்களைப் பயன்படுத்தி வெகுஜன ஊடகங்களையும் மக்கள் போராட்டங்களையும் தீவிரமாக நசுக்கத் தயாராகி வருவதாக நாட்டின் பிரபல தொழிற்சங்கத் தலைவர் எச்சரிக்கிறார்.

“ஊடகங்களை கட்டுப்படுத்த ஊடகவியலாளர்களுக்கான அதிகார சபையொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது”

சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்களில் எழுதுபவர்களை கண்காணித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சட்டங்கள் மூலம் அடக்குமுறையை அரசு கொண்டுவருகிறது என்பதை வலியுறுத்திய ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு பேச்சு சுதந்திரம் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் பல இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர், தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் அனைத்து இடங்களும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

“கொழும்பில் உள்ள அனைத்து முக்கிய போராட்ட மையங்களும் இதற்கு உட்பட்டுள்ளன.”

அரச இரகசிய சட்டத்தின் இரண்டாவது பிரிவின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் உள்ள எட்டு வலயங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.

பொலிஸ் மா அதிபர் அல்லது மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி அவ்விடங்களில் பொதுக்கூட்டம் அல்லது எந்த விதமான செயற்பாடுகளும் நடாத்தப்படக் கூடாது என உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உயர் பாதுகாப்பு வலயங்களில் ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தினால் உயர்நீதிமன்றத்தின் ஊடாகவே பிணைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். கமல் குணரத்ன, தேஷபந்து தென்னகோன், இவர்கள் அனைவரும் ரணிலின் ஆசியுடன் இணைந்து செயற்படுகின்றனர். இந்த அடக்குமுறைக்கு துணைச் சட்டங்களை உருவாக்குகின்றனர். இவை ஜனநாயக விரோதச் செயல்கள்.”

போராட்டங்களை ஒடுக்கும் அரசாங்கம், மறுபுறம் ஊடகங்களை அடக்கி அரசாங்கத்திற்கு எதிராக உருவாகும் சக்திகளை ஒடுக்குவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கும் தொழிற்சங்கத் தலைவர், தொழிற்சங்க இயக்கம் உள்ளிட்ட பரந்த ஜனநாயக சக்திகள் இதற்கு எவ்வகையிலும் இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...