20220102 111815 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குருந்தூர் மலையை பிக்குவுக்கும், விகாரைக்கும் வழங்க முயற்சி!

Share

” குருந்தூர் மலையில் உள்ள காணியை அடாத்தாக அளந்து, அதனை பிக்குவுக்கும், விகாரைக்கும் வழங்குவதற்கு தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முயற்சிக்கின்றார். இதனை தடுப்பதற்கு உங்கள் பேரவை நடவடிக்கை எடுக்குமா?”

இவ்வாறு அரசாங்கத்திடம் இன்று கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தேசிய பேரவை அமைப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் துறைசார் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடன் நானும், சார்ள்ஸ் எம்.பியும் இன்று பேச்சு நடத்தினோம். காணி அளவீடு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறினார். தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு அழைப்பை ஏற்படுத்திக்கொடுத்தோம். அளவீட்டு பணியை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்தார். அந்த பணிப்புரை எடுபடுமா என்பதை நாளைவரை பொறுத்திருந்து பார்ப்போம். ” – என்றார்.

அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு திராணியற்ற இந்த அரசாங்கம், பேரவை கொண்டு வந்து என்ன செய்ய போகின்றது, இதனால் எதுவும் நடக்காது – எனவும் சிறிதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25069532 kerala women
செய்திகள்இந்தியா

சமூக வலைத்தள அவதூறு: கேரளாவில் நபர் தற்கொலை – காணொளி வெளியிட்ட பெண் கைது!

கேரளாவில் அரசு பேருந்தில் நபர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி காணொளி வெளியிட்ட பெண்,...

articles2FkvwhgEeCxFlvL7wu28ST
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் மரணத்தில் சந்தேகம்: உடலைத் தகனம் செய்வதற்குப் பதிலாக அடக்கம் செய்யத் தீர்மானம்!

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் மரணம் சந்தேகத்திற்குரியது...

24 670d5827c55da
செய்திகள்உலகம்

கனடாவில் குடியேறப் புதிய வாய்ப்பு: பிரெஞ்சு மொழி பேசுபவர்களுக்கு 5,000 கூடுதல் PR இடங்கள் ஒதுக்கீடு!

கியூபெக் மாகாணத்திற்கு வெளியே பிரெஞ்சு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், 5,000 கூடுதல்...

1732879144 pollution 1
செய்திகள்இலங்கை

இலங்கையின் பல பாகங்களில் காற்றின் தரம் வீழ்ச்சி: சுவாசப் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் பல...