maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை! – மைத்திரி மழுப்பல்

Share

கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாமல் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட எம்.பிக்களுக்கு எதிராக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு மழுப்பல் போக்கில் பதிலளித்துள்ளார் கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேன.

சர்வக்கட்சி அரசாங்கம் அமையும்வரை அமைச்சு பதவிகள் எதையும் ஏற்பதில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

எனினும், அந்த முடிவை கடாசித்தள்ளிவிட்டு, கட்சியின் 8 எம்.பிக்கள் இதுவரை அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளை பொறுப்பேற்றுள்ளனர். இவர்களில் சாந்த பண்டார, சுரேன் ராகவன் ஆகிய இருவருக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இது தொடர்பில் கட்சித் தலைவரான மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ” ஒழுக்காற்று நடவடிக்கையைவிடவும் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வை தேடுவதே முக்கியத்துவம்மிக்க விடயமாகும்.” – என கூறி சமாளித்தார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...