maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை! – மைத்திரி மழுப்பல்

Share

கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாமல் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட எம்.பிக்களுக்கு எதிராக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு மழுப்பல் போக்கில் பதிலளித்துள்ளார் கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேன.

சர்வக்கட்சி அரசாங்கம் அமையும்வரை அமைச்சு பதவிகள் எதையும் ஏற்பதில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

எனினும், அந்த முடிவை கடாசித்தள்ளிவிட்டு, கட்சியின் 8 எம்.பிக்கள் இதுவரை அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளை பொறுப்பேற்றுள்ளனர். இவர்களில் சாந்த பண்டார, சுரேன் ராகவன் ஆகிய இருவருக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கு சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இது தொடர்பில் கட்சித் தலைவரான மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ” ஒழுக்காற்று நடவடிக்கையைவிடவும் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வை தேடுவதே முக்கியத்துவம்மிக்க விடயமாகும்.” – என கூறி சமாளித்தார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...

world 98
செய்திகள்உலகம்

ஹைட்டியில் சுற்றுலாத் தளத்தில் பயங்கரம்: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!

ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பாரிய...

world 97
செய்திகள்உலகம்

ஈரான் இனி பழைய ஈரான் அல்ல: அணுசக்தி திட்டங்களை முறியடித்துவிட்டதாக நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “வரலாற்றுச் சாதனைகளை” படைத்துள்ளதாகவும், அதன் அணுசக்தி லட்சியங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலியப்...

world 96
செய்திகள்உலகம்

14 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையில் எஞ்சியுள்ள முரண்பாடுகள்!

மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர்...