K4 A 02
இலங்கைசெய்திகள்

ஜெனிவாவில் கோள் மூட்டும் எதிர்க்கட்சிகள்!

Share

” ஜெனிவா தொடரில் பங்கேற்றுள்ள எதிர்க்கட்சிகள் நாட்டுக்காக குரல் கொடுக்காமல்,  கோள் மூட்டும் நடவடிக்கையையே முன்னெடுத்து வருகின்றன. இது தொடர்பில் அரசாங்கம் கவலையடைகின்றது”

– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன கூறியவை வருமாறு,

” எமது நாடு தற்போது கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டுக்காகவும்,  மக்களுக்காகவும் சர்வதேச தளத்தில் உதவிகளை கோராமல், கோள் மூட்டும் நடவடிக்கையையே எதிரணிகள் முன்னெடுத்துவருகின்றன.

கட்சிகளிடையே கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அரசியல் போட்டி ஏற்படலாம். அதனை தேர்தல் காலத்தில் உள்நாட்டில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் சர்வதேச தளத்தில் கிடைக்கும் ஒரு வாய்ப்பை நாட்டுக்காக பயன்படுத்த வேண்டும். அந்த அணுகுமுறையை எமது நாட்டு எதிரணிகள் பின்பற்றுவதில்லை.

ஆங்காங் சூகி கைது செய்யப்பட்டு,  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.  மியன்மாருக்கு தடைவிதிக்க உலக நாடுகள் முன்வந்தன. ஆனால் நாடுமீது தடைவிதிக்க வேண்டாம், மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆங்காங் சூகி நாட்டுக்காக குரல் கொடுத்தார்.

மும்பை தாக்குதலின் பின்னர், இந்தியாவில் நெருக்கடி ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த பிஜேபி தலைவர் சர்வதேசத்திடம் உதவி கோரினார். எமது நாட்டு எதிர்க்கட்சிகளிடம் அந்த சிந்தனை – எண்ணப்பாடு இல்லை. ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...