chandrika
அரசியல்இலங்கைசெய்திகள்

வெளியில் தலை காட்டவே வெட்கமாக உள்ளது!

Share

” உலகில் எந்தவொரு நாடும் இலங்கையில் ஏற்பட்ட நிலைபோல் வங்குரோத்து அடைந்தது கிடையாது. வெளிநாடு செல்வதற்குகூட வெட்கமாகவுள்ளது. 3 மாதங்கள் நான் இங்கிலாந்தில் தங்கியிருந்தேன். ஆனால் வெளியில் தலைக்காட்டவே இல்லை.”

இவ்வாறு இலங்கையின் 4 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தலைமையில் உதயமான ‘நவ லங்கா நிதாஸ் பக்சய’          ( புதிய இலங்கை சுதந்திரக்கட்சி) கட்சியின் தலைமையக திறப்பு விழா நேற்று பத்தரமுல்லையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சந்திரிக்கா அம்மையார் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்நாட்டை ஆண்டவர்கள் மக்கள் நலன் பற்றி சிந்திக்கவில்லை, மக்கள் தமக்கு வாக்களித்தால்போதும், அதன் பின்னர் நாட்டை சொந்தமாக்கிவிடலாம் என்ற நினைப்பிலேயே செயற்பட்டுள்ளனர். தவறான அணுகுமுறைகளைக் கையாண்டனர். இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காணாமல்ஆக்கப்பட்டனர்.

கள்வர்களை இந்தக் கட்சிக்கு இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும், உரிய கொள்கைகளின் அடிப்படையில் பயணிக்குமாறும் குமார வெல்கமவிடம் கேட்டுக்கொள்கின்றேன். கொள்ளையடிக்கும் நோக்கில் எவரும் கட்சியில் இணைந்துவிடவும் வேண்டாம்.

அதேவேளை, உலகில் எந்தவொரு நாடும் இப்படி வங்குரோத்து அடைந்தது கிடையாது. வெட்கம். ஒரு அரச தலைவராக, முன்னாள் ஜனாதிபதியாக நான் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். தற்போது செல்வதற்கு வெட்கமாக உள்ளது. இங்கிலாந்தில் மூன்று மாதங்கள் இருந்தேன், எவரையும் சந்திக்கவில்லை. ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...