1578038553 sajith premadasa opposition leader 5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக சதித் திட்டம்! – சஜித் குற்றச்சாட்டு

Share

மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நீக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் சஜித் கூறியவை வருமூறு,

“சபாநாயகர் , உங்கள் தலையீட்டால், மத்திய வங்கியின் ஆளுநர் பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டு, நாடு செல்ல வேண்டிய எதிர்கால பொருளாதாரப் பாதை குறித்து மிக முக்கியமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். கலாநிதி நந்தலால் வீரசிங்க ஓய்வு பெற்று ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அவரை கோட்டாபய ராஜபக்சவே மீண்டும் அழைத்து வந்தார். கலாநிதி நந்தலால் வீரசிங்க சிறந்த அதிகாரி. எனவே, அவர் ஆளுநரானதை நாம் வரவேற்கின்றோம்.

ஆனால், அவரை அழைத்து அவர்மீது பழிசுமத்துவது ஏற்புடைய விடயம் அல்ல. நேற்றைய தினம் சபையில் இந்த அரச தரப்பு உறுப்பினர்கள் நாட்டை வங்குரோத்து செய்யும் முடிவை எடுத்தவர் மத்திய வங்கி ஆளுநரே என கருத்து தெரிவித்திருந்த போதும் நேரடியாக கூறவில்லை. மறைமுகமாக சாடியிருந்தனர். மத்திய வங்கி ஆளுநரை நீக்குவதற்கு ஆளுங்கட்சியினர் சதித்திட்டம் தீட்டுகின்றனரா” – என்றார் சஜித்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...