ranil wickremesinghe at parliament
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைக – ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

Share

சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணையுமாறு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசில் கட்சிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் அழைப்பு விடுத்தார்.

திருத்தியமைக்கப்பட்ட இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இன்று சபையில் முன்வைத்து உரையாற்றினார்.

இதன்போதே , நாட்டை மீட்பதற்காக சர்வக்கட்சி அரசில் இணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

” தற்போதைய சூழ்நிலையில் நாடு குறித்து சிந்தித்து, அதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தவறுகள் இருப்பின் அதனை சர்வக்கட்சி அரசு ஊடாக திருத்திக்கொள்ளலாம். அரசியல் நிகழ்ச்சி நிரலை ஒதுக்கிவைத்துவிட்டு, சர்வக்கட்சி அரசில் இணையுங்கள்.” -எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் பட்ஜட் உரையின் முக்கிய சில விடயங்கள் வருமாறு,

கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும், 20 ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமாக 2 ஆயிரத்து 500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும்.

ஜோன்கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கிளையொன்று குருணாகலையில் நிறுவப்படும்.

அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றியளித்துள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த உரிய திட்டம் வகுக்கப்படும்.

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ சமூகம் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...