SureshPremachandran
அரசியல்இலங்கைசெய்திகள்

கடந்தகால தவறுகளை உணர்ந்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்! – சுரேஷ் க.பிரேமச்சந்திரன் வலியுறுத்து

Share

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கொடுமையை இன்றளவிலும் தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றனர். இன்று அந்த சட்டம் ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கும் நாட்டின் இதர பகுதியினரையும் விட்டுவைக்கவில்லை.

இந்நிலையில் இந்த சட்டத்தை இப்பொழுது நடைமுறைப்படுத்துவது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் உலகநாடுகளிடமிருந்து இலங்கை தனிமைப்பட்டுவிடும் என்றும் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறியிருக்கிறார். அவரது கூற்றிலிருந்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு இன்னமும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு மனம் வரவில்லை என்பதும் கடந்தகாலத்தில் தவறுகள் நடந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் அதைத் திருத்திக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை என்பதும் தெளிவாகின்றது.

எனவே நாட்டை முன்னேற்ற விரும்பினால் கடந்தகால தவறுகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு அதை நிவர்த்தி செய்ய தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வரவேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ். க. பிரேமச்சந்திரன் தெறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

ஏறத்தாழ நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் தற்காலிக ஏற்பாடாக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்;த்தனவினால் பயங்கரவாதத் தடைசட்டம் கொண்டுவரப்பட்டது. தற்காலிகம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம் இன்றுவரை நீடித்திருக்கின்றது. இந்த சட்டமானது எவரையும் தாம் விரும்பியவாறு கைது செய்வதற்கும், நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தாமல், இராணுவ, பொலிஸ் முகாம்களில் அவர்களைத் தடுத்து வைத்து சித்திரவதை செய்து இராணுவம் பொலிசார் விரும்புகின்ற வகையில் வாக்குமூலம் பெறுவதற்கும் வழிவகுக்கின்றது.

மனித உரிமை ஆர்வலர்களும், சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும், ஐரோப்பிய ஒன்றியமும் இது ஒரு காட்டுமிராண்டித்தனமான சட்டம் என்றும் இது உடனடியாக நீக்கப்படவேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றனர். இந்தக் காட்டுமிராண்டிச் சட்டத்தின்கீழ் கடந்த காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் கைதுசெய்யப்பட்டு மிகப்பல சித்திரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவித்து வந்திருக்கின்றனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் கடந்த காலத்தில் சிறிலங்கா தொடர்பாக கொண்டுவந்த தீர்மானத்திலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியிருந்தது. ஆனால், அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள், நிர்வாகக் குளறுபடிகள், அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி ராஜபக்ச குடும்பத்தினரை வீட்டிற்கு அனுப்பினார்கள். அந்த ஜனநாயகபூர்வமான போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்க முற்பட்டபொழுது, அதற்கெதிராக மக்கள் கொதி;த்தெழுந்து வன்முறையாளர்களுக்கும் பாடம் புகட்டினர்.

தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக வந்து, மகிந்த ராஜபக்ச அவர்கள் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததன் காரணமாக, ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் அவர்கள், மக்கள் எழுச்சியின் காரணமாக விரட்டியடிக்கப்பட்ட கோட்டபாய ராஜபக்ச அவர்களின் இடத்திற்கு இப்பொழுது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவர், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட பலபேரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்கின்ற ஒரு நடவடிக்கையும் நடந்துவருகின்றது.

மாணவர் அமைப்புகளின் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தி;கீழ் கைதுசெய்யப்படுகிறார்கள். அதற்கான ஒப்புதலையும் உத்தரவுகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வழங்கியிருக்கின்றார்.

தமிழ் மக்களுக்கு எதிராக இந்த காட்டுமிராண்டிச் சட்டம் ஏவிவிடப்பட்டபொழுது, சிங்கள அரசியல் தலைவர்களோ, பொது அமைப்புகளோ, தொழிற்சங்கங்களோ யாருமே அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. ஆனால் இந்தக் கொடிய சட்டத்தின்கீழ் நாட்டின் ஜனநாயகத்திற்காகவும் ஊழலை எதிர்த்தும் போராடுகின்ற மக்களை கைதுசெய்கின்றபொழுது குறைந்தபட்சம் இந்த சட்டத்திற்கெதிரான குரல் தென்பகுதியில் எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது. எம்மைப் பொறுத்தவரையில் அன்றும் சரி இன்றும்சரி இந்தக் காட்டுமிராண்டித்தனமான சட்டம் அகற்றப்படவேண்டுமென்பதில் தமிழ் மக்களாகிய நாம் உறுதியாக இருக்கின்றோம்.

ஆனால் இங்கு நகைப்புக்குரிய விடயம் என்னவெனில் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் பீரிஸ் அவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றிக்குறிப்பிடும்பொழுது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பிரயோகிப்பது பிழை என்றும் உலகநாடுகள் அதனை ஏற்றுக்கொள்ளாது என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் இலங்கைக்கு எதிராக காட்டமான தீர்மானத்தை நிறைவேற்ற அது வழிவகுக்கும் என்றும் ஆகவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இப்பொழுது பாவிக்கக்கூடாது என்றும் கூறியிருக்கின்றார். அவரைப் பொறுத்தவரையில் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தற்காலிகமாகவேணும் தப்புவதற்கு ஆலோசனைகளை முன்வைக்கின்றாரே தவிர, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்கும்படி அவர் கூறவில்லை.

ஜனநாயகத்தின்மீதும் மனித உரிமைகள்மீதும் அக்கறை கொண்டவர்களும், அமைதி, சமாதானத்தை விரும்பக்கூடிய எவரும் இத்தகைய காட்டுமிராண்த்தனமான சட்டத்தை ஏற்க மாட்டார்கள். ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய்கின்ற இத்தருணத்திலாவது சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள், மற்றும் தொழிற்சங்கத்தினரும் இத்தகைய சட்டங்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என்று கோருகின்றோம். தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஊழல் மலிந்த அரசுகளைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இவ்வாறான சட்டங்கள் என்ன வடிவத்தில் என்ன பெயரில் வந்தாலும் அவை முற்றுமுழுதாக நிராகரிக்கப்படவேண்டும் என்றும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...