received 474836184177896
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காரைநகர் பிரதேச சபை கூட்டமைப்பு வசம்

Share

காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் க.பாலச்சந்திரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தவிசாளராக இருந்த சுயேட்சை குழு உறுப்பினர் மயிலன் அப்பாத்துரை தனது பதவியை இராஜினாமா செய்தமையால் , தவிசாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.

புதிய தவிசாளர் தெரிவு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிரதேச சபை சபா மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

அதன் போது , ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளினதும் தலா இரு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களும் , சுயேட்சை குழுவை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஒரு உறுப்பினருமாக 7 உறுப்பினர்கள் சபைக்கு சமூகம் அளித்தனர்.

அதனை தொடர்ந்து தவிசாளர் தெரிவு ஆரம்பமான போது ,, கூட்டமைப்பின் உறுப்பினர் விஜயராசா , சக உறுப்பினர் க. பாலச்சந்திரனை தவிசாளராக முன்மொழிந்தார். அவருக்கு எதிராக வேறு பெயர்கள் பிரேரிக்கப்படாமையால் பாலச்சந்திரன் போட்டியின்றி ஏக மனதாக தவிசாளராக தெரிவிவானார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...