Bandula Gunawardane
அரசியல்இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க நடவடிக்கை?

Share

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ள சட்டமாகும் என்றும், அதில் உள்ள சில நிபந்தனைகளுக்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் புதிய திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். .

எதிர்வரும் காலங்களில் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 23
செய்திகள்உலகம்

ஈரான் போர்நிறுத்தத்தின் பின்னணியில் சீனா ? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஈரானுடனான இரண்டு வார காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை “முழுமையான மற்றும் மிகப்பெரிய வெற்றி” என்று அமெரிக்க...

world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...