20220820 110026 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஐ.நா ஆசிய பசுபிக் பிராந்திய பிரதிநிதி – யாழ் முதல்வர் சந்திப்பு

Share

ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளருக்கும் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள குறித்த குழுவினர் இன்றைய தினம் மாநகர சபை முதல்வரை சந்தித்தவுடன் தற்போது நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த சந்திப்பின்போது தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் யுத்தத்தின் பின் நாட்டில் பல சொத்துக்கள் சேதம் ஆக்கப்பட்டமை வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் எமது நாட்டிலே முதலீடுகளை கொண்டு வருவதற்கு முன்பே வருகின்ற போதிலும் எமது நாட்டில் உள்ள முரண்பாடான கொள்கைகள் காரணமாக அவர்கள் தமது முதலீட்டை மேற்கொள்ளாத நிலை காணப்பட்டு வருவதாகவும் மாநகர சபை முதல்வர் ஐக்கிய நாடுகள் சபையின் பணிப்பாளரிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

மேலும் தற்போது ஆட்சியிலுள்ள ஜனாதிபதி பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் குறித்த ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்த காலப் பகுதியிலே ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது பயங்கரவாத தடை சட்டத்தினை நடைமுறையில் வைத்திருப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்னும் விடயத்தையும் குறித்த பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...