299963803 377862514510411 963139856606679809 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லை. மீனவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்! – மகஜர் கையளிப்பு!

Share

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்தக் கோரியும், சட்டவிரோத தொழில்களை தடுத்து நிறுத்த கோரியும் முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு நகரில் கவனயீர்ப்பு மாபெரும் போராட்டமொன்று இன்று(16) காலை 10.00 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மீனவ சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது,
* தடையின்றி மண்ணெண்ணை வழங்க வேண்டும்.
* மானிய விலையில் மண்ணெண்ணை வழங்க வேண்டும்.
* இந்திய இழுவைப் படகுகளின் வருகையினை தடை செய்ய வேண்டும்.
* 3 மாதத்திற்கான இழப்பீடு வழங்க வேண்டும்.
* சட்டவிரோத மீன்பிடி தொழில்கள் அனைத்தும் தடைசெய்ய வேண்டும்.
* ஒயிலின் விலை குறைக்க வேண்டும் .
முதலான கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெற்றிருந்தது.

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம் ) க.கனகேஸ்வரன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எஸ். குணபாலன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தரும் திருமதி விக்னேஸ்வரன் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.

குறித்த மகஜர் ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

300048383 377862637843732 5867321228756129927 n 299995975 377862871177042 1634828862293942546 n 299915761 377865121176817 2062212696132758004 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...