gota mahinda
அரசியல்இலங்கைசெய்திகள்

அண்ணனின் அழைப்பு! – மெளனம் காக்கும் கோட்டா!

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை நாட்டிற்கு வருமாறு, அவரின் சகோதர் மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்புக்கு கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து எவ்வித உறுதியான பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகுமாறுகோரி மிகப்பெரும் போராட்டம் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி நடைபெற்றது.

குறித்த போடட்டும் இடம்பெற்ற நிலையில், தலைமறைவாகியிருந்த கோட்டாபய ராஜபக்ச, நாட்டிலிருந்து தப்பித்து மாலைதீவு சென்றார்.

அங்கு தங்கியிருந்த அவர், ஒரு சில தினங்களில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் அவருக்கு சாதாரண விசாவே வழங்கியிருந்த நிலையில், இங்கிருந்து தற்போது தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, கோட்டாபயவை மீண்டும் நாட்டுக்குத் திரும்புமாறு விடுத்த கோரிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து எவ்வித உறுதியான பதிலும் கிடைக்கவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் வந்து மீண்டும் தங்குவதற்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளும் இல்லை என்று பாதுகாப்பு தரப்பினர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...