298534556 6313943521966524 3112426230294896555 n
அரசியல்இலங்கைசெய்திகள்

வெளியே வர வேண்டாம்! – கோட்டாவுக்கு தாய்லாந்து பணிப்பு

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாங்கொக்கில் தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் பணிப்புரை விடுத்துள்ளனர்

இதேவேளை, அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அங்கு விசேட கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பேங்காக் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகுமாறுகோரி மிகப்பெரும் போராட்டம் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி நடைபெற்றது.

குறித்த போராட்டம் இடம்பெற்ற நிலையில், தலைமறைவாகியிருந்த கோட்டாபய ராஜபக்ச, நாட்டிலிருந்து தப்பித்து மாலைதீவு சென்றார்.

அங்கு தங்கியிருந்த அவர், ஒரு சில தினங்களில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் அவருக்கு சாதாரண விசாவே வழங்கியிருந்த நிலையில், இங்கிருந்து தற்போது தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.

தாய்லாந்து அரசும் அவருக்கு தற்காலிக விசாவே வழங்கியுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச.

முதலில் புகெட் நகரில் உள்ள விமான நிலையத்தில் கோட்டாபய வந்திறங்க முடிவு செய்திருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்கள் நிமித்தம் அவர் பாங்காக் ராணுவ விமான தளத்தில் தரையிறங்கியுள்ளார்.

இங்கிருந்து பெயர் வெளியிடப்படாத தனியார் ஹோட்டலுக்கு கோட்டாபய ராஜபக்ச அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில், தாய்லாந்து சிறப்பு பிரிவு பொலிஸார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர் எனவும், அவரது பாதுகாப்பு கருதி அவரை வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும் குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 6
இலங்கைஅரசியல்செய்திகள்

இலங்கையை மோதல் களமாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதாக விமல் வீரவன்ச சந்தேகம்: கொழும்பில் ஊடக சந்திப்பு!

ஈரான் போர்க்கப்பல் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கையை...

11 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து: தீயணைப்புப் படையினர் விரைந்து நடவடிக்கை

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இன்று (மார்ச் 7) மதியம்...

12 6
செய்திகள்உலகம்

ஈரான் சரணடைந்துவிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்து வரும் இடைவிடாத தாக்குதல்கள் காரணமாக ஈரான்...

13 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹார்முஸ் நீரிணைப் பாதுகாப்பு: அமெரிக்கக் கடற்படையின் தலையீடு குறித்து ஈரான் கடும் எதிர்ப்பு!

மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல்களால் ஹார்முஸ்...