3c322545 30b25ef6 kanchana wijeskera 850x460 acf cropped 1
இலங்கைசெய்திகள்

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு!

Share

மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவிக்கையில்,

கச்சா எண்ணெய் கப்பல் எதிர்வரும் 13 ஆம் திகதி நாட்டை வந்தடைந்ததும். சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 15 ஆம் திகதி முதல் இயங்கத் தொடங்கும். 19 ஆம் திகதி முதல் விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட துறைகளுக்கு மண்ணெண்ணை தொடர்ந்து விநியோகிக்கப்படும்.

மண்ணெண்ணெய் 87 ரூபாயிலிருந்து, விலையை மாற்றியமைப்பதில் தற்போது அரசின் கவனம் உள்ளது.

மீனவர்கள், விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களை இலக்காகக் கொண்டு மண்ணெண்ணெய் வழங்குவதற்கு தனியான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மண்ணெண்ணெய் வழங்கும் போது மீனவர்களுக்கு செல்லாமல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. தனியார் பஸ்களில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டது. எனவே அது தவிர்க்கப்பட வேண்டும் – என்றும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....