766767
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய இருவர் கைது – கைதின் பின்னணியில் வீட்டுக்கு தீ வைப்பு?

Share

யாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளினை காட்டி பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்பங்களை ஏற்படுத்திய குற்றத்தில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் உறவினரும், சம்பவம் நடக்கும் போது அவ்விடத்தில் நின்ற ரசலிங்கம் பொன்னம்பலம் என்பவரின் வீட்டுக்கு இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது,

காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை எரிபொருள் நிரப்ப வந்த இரு இளைஞர்கள் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி, எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் , பணியாளர்களுக்கு வாளினை காட்டி மிரட்டியும் உள்ளனர்.

சம்பவத்தினை அடுத்து இரு இளைஞர்களையும் ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவம் நடைபெறும் போது , எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றிருந்த உரிமையாளரின் உறவினரின் வீட்டினுள் இரவு புகுந்த கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்துள்ளது.

வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் தீ வைப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...