767676
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் எரிபொருள் வரிசையில் நிற்கும் மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாக திருட்டுக்கள் அதிகரிப்பு!

Share

யாழில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் விடப்படும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து அதன் உதிரி பாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வரிசையில் விடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றின் முன் பகுதியின் பாகம் களவாடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் விடப்பட்ட “ஜப்பான் 200” ரக மோட்டார் சைக்கிளின் ஒரு பக்கம் பாகம் களவாடப்பட்டு இருந்தது. அதன் பெறுமதி 12 ஆயிரத்திற்கும் அதிகம் என உரிமையாளர் தெரிவித்து இருந்தார்.

இவ்வாறாக வரிசைகளில் இரவு வேளைகளில் விடப்படும் மோட்டார் சைக்கிள்களின் , பக்க கண்ணாடிகள் , சிக்கனல்கள் , கோர்ன் உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....