Belpola Vipassi Thera
அரசியல்இலங்கைசெய்திகள்

இரண்டு வருடங்களாவது போராட்டங்களை நிறுத்துங்கள்!

Share

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து வகையான போராட்டங்களையும் ஈராண்டுகளுக்காவது நிறுத்தி, ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என போராட்டக்காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் கோட்டை விகாரைப் பிரிவின் பதிவாளரான பெல்பொல விபஸ்சி தேரர்.

நாட்டில் 30 வருடங்களாக நீடித்த போரை மஹிந்த ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்சவும் முடிவுக்கு கொண்டுவந்ததால்தான் இன்று சுதந்திரமாக போராட முடிகின்றது என்பதை மறந்துவிட வேண்டாம் எனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று மாலை சேதவத்த, வெஹெரகொட புராதன விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். அவ்வேளையில் அனுசாசன உரையாற்றிய பெல்பொல விபஸ்சி தேரர் தேரர், ஜனாதிபதிக்கு ஆலோசகர்கள் எவரும் தேவையில்லை, எல்லாம் அறிந்த சிறந்த விமானியே அவர் எனவும் சுட்டிக்காட்டினார்.

” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொறுமையும், தூரநோக்கு சிந்தனையுமே அவரின் தலைமைத்துவத்துக்கான ஆபரணமாகும். இந்நாட்டில் ஒழுக்கமும், பொறுமையும் இல்லை. பிரச்சினைகளை ஒரே தடவையில் தீர்த்துவிட முடியாது. எனவே, இந்நாட்டை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  அவர் முறையாக செயற்பாடவிட்டால் போராடலாம்.

மஹிந்த ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார், கோட்டாபய ராஜபக்சவும் விரட்டியடிக்கப்பட்டார். இப்படி வருகின்ற எல்லா தலைவர்களையும் விரட்டியடித்தால் நாட்டை ஆள்வது யார்? போராட்டங்கள் மூலமே நாட்டை குழப்ப முயற்சிக்கப்படுகின்றது. எனவே, அனைத்து போராட்டங்களும் இரண்டு வருடங்களுக்காவது நிறுத்தப்பட வேண்டும்.” -எனவும் தேரர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...