Theepan scaled
இலங்கைசெய்திகள்

ஆசிரியர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு இதுவரை தீர்வில்லை! – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

Share

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கரைச்சி கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுக்க கல்வி வலயத்தினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரையில் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கரைச்சி கோட்டத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு எரிபொருளை பெறுவதற்கான எரிபொருள் பங்கிட்டு அட்டையை வழங்குவதற்கு கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆசிரியர்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். இந்த விடயத்தில் கரைச்சி கோட்டக்கல்வி பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி தெற்கு கல்வி வலய பணிப்பாளர் ஆகியோரே இதற்கு முழு பொறுப்பாகும்.

ஆகவே இந்த விடயத்தில் கவனம் செலுத்தி ஆசிரியர்களுக்கு எரிபொருள் பங்கீட்டு அட்டையை வழங்குகின்ற செயற்பாடுகளை வடக்கு மாகாண கல்வி அமைச்சு கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...