721187541parliamnet5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

19 ஆம் திகதி ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள்!

Share

” நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடும். அன்றைய தினம் ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.” – என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் இன்று அறிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது ஜனாதிபதி பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடம், ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம், வேட்பு மனு தாக்கல் செய்யும் திகதி, வாக்கெடுப்பு திகதி போன்ற விபரங்களை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் வெளியிட்டார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரம் வேட்புமனு தாக்கல் செய்தால் 19 ஆம் திகதியே, அவர் ஜனாதிபதியென அறிவிக்கப்படுவார். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் 20 ஆம் திகதி வாக்கெடுப்பு மூலம் தேர்வு நடக்கும் எனவும் அவர் அறிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...