images 9
உலகம்செய்திகள்

இராஜதந்திர நடைமுறை மீறல்! – பிரிட்டிஷ் தூதர் வெளியேற்றம்

Share

பிரிட்டிஷ் தூதர் இராஜதந்திர நடைமுறைகளை மீறியதால் நாட்டைவிட்டு வெளியேறுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டதாக மியன்மார் இராணுவம் கூறியுள்ளது.

மியன்மாருக்கான பிரிட்டிஷ் தூதராக பீட் வாவ்ல்ஸ் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து தலைமைத்தூதர் இல்லாத வேளையில் தற்காலிகத் துணைத்தூதராக அவர் செயல்படுவார் என்று லண்டன் அறிவித்திருந்தது.

மியன்மாரில் நிலவும் அரசியல் குழப்பத்தின் எதிரொலியாக அந்த நடவடிக்கை அமைந்தது. பிரிட்டிஷ் தூதர் என்ற பொறுப்பை அங்கீகரிக்க மியன்மார் இராணுவம் மறுத்துவிட்டது.

கடந்த பெப்ரவரியில் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வாவ்ல்ஸ் மியன்மார் புறப்பட்டுச் சென்றார். ஆனால் அங்குள்ள இராணுவம் அவருக்கு அனுமதி மறுத்தது.

வாவ்ல்ஸ் மியன்மார் இராணுவம் நடத்துவதாகச் சொல்லப்படும் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாகக் கருத்துச் சொல்பவர். மியன்மாரில் தம்முடைய பொறுப்பு திடீரென முடிவுக்கு வந்துள்ளது என்று வாவ்ல்ஸ் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 683bc7c6b9af4
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். முன்னாள்...

25 683beddc44bb5
இலங்கைசெய்திகள்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு..

ஜூன் மாதத்தில் தங்களது எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம்...

4
இலங்கைசெய்திகள்

இலங்கை வரும் ஐநாவின் உயர் அதிகாரி.. தொடர் அழுத்தத்தில் அநுர அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதம் அல்லது...

images
இலங்கைசெய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம்...