image 5ccf96f3b1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மலையகத்தில் போராட்டம் !

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மலையகத்தில் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை மற்றும் மொனறாகலை ஆகிய மலையக மாவட்டங்களில் எட்டு திக்கிலும் ‘கோட்டா கோ ஹோம்’ என்ற கோஷம் ஓங்கி ஒலித்தது.

மேற்படி மாவட்டங்களில் பிரதான மற்றும் சிறு நகரங்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், பெருந்தோட்டப்பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் இன்று தொழிலுக்கு செல்லவில்லை. தமது குடியிருப்புகளுக்கு முன்பாக கறுப்பு கொடிகளை பறக்கவிட்டிருந்தனர். அதேபோல தோட்டவாரியாக எதிர்ப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து முடங்கியிருந்தது. மேலும் சில இடங்களில் மட்டுப்படுத்தப்பட்டளவில் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை, தலவாக்கலை உட்பட சில நகரங்களில் போராட்டம் உக்கிரமடைந்தது. கட்சி, தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் மக்கள் சக்தியாக ஒன்றிணைந்து, கோட்டா- ரணில் அரசே பதவி விலகு என வலியுறுத்தினர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...