Kamal Gunaratne
இலங்கைசெய்திகள்

ஜுலை 5 ,6 இல் குண்டுவெடிப்பு! – பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம்

Share

கரும்புலி நினைவேந்தலை முன்னிட்டு – அதனை இலக்கு வைத்து ஜுலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் வடக்கிலோ அல்லது தெற்கிலோ குண்டு வெடிக்க வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று கேள்வி எழுப்பினார்.

2022 ஜூன் 27 ஆம் திகதியன்று, பொலிஸ்மா அதிபரால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவுக்கு இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அநுரகுமார திஸாநாயக்க தகவல் வெளியிட்டார்.

“வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின்றின் தலையீட்டுடனேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் தாக்குதல் நடத்தப்பட்டது என காரணங்களை காண்பிக்கும் வகையிலேயே அவை முன்னெடுக்கப்படவிருக்கின்றன.

எனவே, யாழ்ப்பாணம் பகுதியில் தற்போது கடமையாற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரமுகர்கள் ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பொது வைபவங்களில் பங்கேற்க ​வேண்டாமென குறித்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.” எனவும் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

எவ்வாறு இந்த தகவல் கிடைக்கப்பெற்றதா, இவ்வாறு சம்பவமொன்று இடம்பெறவுள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்துவதற்கான ஓர் நகர்வா இது என்ற சந்தேகம் எழக்கூடும் எனவும் அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...