Getty standard american english 83297359 583fb4d45f9b5851e58d7214 1
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவின் தேடப்படுவோர் பட்டியலில் ‘கிரிப்டோ ராணி’யின் பெயர்!

Share

காணாமல்போயுள்ள கிரிப்டோ ராணி என்று அறியப்படும் ருஜா இக்னடோவா என்ற பெண் அமெரிக்கா புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐயினால் தேடப்பட்டு வரும் முக்கிய 10 பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தனது 40 வயதுகளில் இருக்கும் பல்கேரியாவைச் சேர்ந்த அவர் ‘வைன்கொயின்’ என்று அழைக்கப்படும் கிரிப்டோ நாணய மோசடியில் ஈடுபட்டவர் என தேடப்பட்டு வருகிறார். இவர் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 4 பில்லியன் டொலருக்கு மேல் மோசடி செய்து தலைமறைவாகி இருப்பதாக எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

அமெரிக்கா பிடியாணை பிறப்பித்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் அவர் காணாமல்போயுள்ளார்.

கிரிப்டோ கரன்சி என்று அழைத்துக் கொண்ட வன்கொயின், 2014இல் அதிக நபர்களுக்கு நாணயத்தை விற்றால் வாங்குபவர்களுக்கு தரகுப் பணம் வழங்க ஆரம்பித்தது. எனினும் இந்த முறை பாதுகாப்பு அற்றது என்று எப்.பி.ஐ குறிப்பிட்டது.

இந்நிலையில் இக்னடோவாவை கைது செய்வதற்கு துப்பு வழங்குபவருக்கு 100,000 டொலர் சன்மானம் அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்.பி.ஐயினால் தேடப்படும் முதல் பத்துப் பேரில் இருக்கும் முதல் பெண் இவராவார்.

2017இல் பல்கேரியாவில் இருந்து கிரேக்கத்துக்கு செல்லும் விமானம் ஒன்றிலேயே அவர் கடைசியாக காணப்பட்டுள்ளார். அது தொடக்கம் அவர் தொடர்ந்து காணாமல்போனவராக உள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...